அரசு பஸ்சில் மகளிருக்கு இலவசம் என்பதால் அலட்சியம் காட்டுகிறீர்களா ஆவேசமடைந்த பெண். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 3 November 2023

அரசு பஸ்சில் மகளிருக்கு இலவசம் என்பதால் அலட்சியம் காட்டுகிறீர்களா ஆவேசமடைந்த பெண்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் யு9 நகர பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்.  ஊத்தங்கரையில் இருந்து பாம்பாறு அணை, மாரம்பட்டி, கோவிந்தாபுரம், மகனூர்பட்டி, எக்கூர் வரை செல்லக்கூடிய அரசு பஸ்சில் பயணிக்க பெண் ஒருவர், மகனூர்பட்டியில்  கையை காட்டி பஸ்சை நிறுத்த கேட்டுள்ளார். அதனைப் பார்த்த பிறகும், வேண்டுமென்றே யு9 பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் வந்ததால் ஆத்திரமடைந்த பெண்,  பின் தொடர்ந்து வந்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த நகர பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

இது குறித்து பெண் பயணி கூறுகையில், மகளிருக்கு அரசு நகர பஸ்சில் பயணிக்க இலவசமென அரசு அறிவித்த நிலையில், அரசு பஸ்சை ஏன்  பஸ் ஸ்டாப்பில் நிறுத்தாமல் சென்றீர்கள், மகளிருக்கு இலவசம் என்பதால் அலட்சியம் காட்டுகிறீர்களா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஊத்தங்கரை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பெண் பயணியிடம் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ். சத்தியநாராயணன்.

No comments:

Post a Comment

Post Top Ad