கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை பகுதியில் 69 ரத்ததான முகாம்கள் நடத்தி, 2,700 யூனிட் ரத்தம் வழங்கிய தன்னார்வலர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊத்தங்கரை இளம் செஞ்சிலுவை சங்க தலைவர் மருத்துவர் தேவராசு, துணை தலைவர் ஆர்.கே. ராஜா, நேசம் தொண்டு நிறுவன நிறுவனர் குணசேகரன் ஆகியோரை பாராட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ். சத்தியநாராயணன்.
No comments:
Post a Comment