தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஊத்தங்கரை பணிமனையில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அராஜகங்கள் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 18 November 2023

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஊத்தங்கரை பணிமனையில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அராஜகங்கள்


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து சாமல்பட்டி வழியாக சால ஜோகிபட்டி, கனிகார ஜோகிப்பட்டி, எட்டிப்பட்டி நான்கு ரோடு மற்றும் அந்தேரிபட்டி வழியாக மத்தூர் செல்லும் U.14 நெம்பர் நகர பேருந்து மாலை நேரங்களில் மாணவ மாணவியர்களை ஏற்றி வராமல் தொடர்ந்து இந்த வழியாக வரும் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் அராஜக செயலில் ஈடுபடுவதால் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் மிகவும் வேதனைக்குள்ளாகி நெடுஞ்சாலையில் காத்திருக்கும் அவல நிலையாக உள்ளது.

எனவே முறையான அதிகாரிகள் ஊத்தங்கரை அரசு பேருந்து பணிமனையை ஆய்வு செய்து தவறு செய்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இல்லையெனில் ஊத்தங்கரை அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் அச்சப்படுகிறார்கள் என்பது சமூக ஆர்வலர்களின்ஒரு கருத்தாக உள்ளது எனவே சம்பந்தப்பட்ட தர்மபுரி மண்டல இயக்குனர் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை வேண்டும் என்பது அனைத்து தரப்பு வேண்டுகோளாக உள்ளது இதை உடனடியாக நிறைவேற்றுவார்களா????


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன் 

No comments:

Post a Comment

Post Top Ad