இதில் தனது மகன் மற்றும் மருமகள் அடித்து கால் முறிவு ஏற்பட்டது என்று மருத்துவமனையில் அனுமதித்தும் இவருக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் முறையான அறுவை சிகிச்சை செய்யவில்லை என்பது இவரின் மனக்குமாறலாக உள்ளது, எனவே ஊத்தங்கரை தலைமை மருத்துவர் இவருக்கு இங்கு உரிய அறுவை சிகிச்சை அளிக்க வழிவகை செய்ய வேண்டும், அல்லது கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்க பரிந்துரைக்க வேண்டும், என்பது இவரின் வேண்டுகோளாக உள்ளது.
ஊத்தங்கரை அரசு மருத்துவமனை பொதுமக்கள் மத்தியில் நற்பெயரை கொண்டுள்ளது, இதுகுறித்து ஊத்தங்கரை மருத்துவமனை கூறுகையில், இவருக்கு இங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது, ஆனால் திமராயன் சிகிச்சை அளிக்கவில்லை என தவறான தகவலை பரப்பி வருகின்றார் என கூறினார். ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் இவருக்கு அறுவை சிகிச்சை அளிக்க கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்க வேண்டும், இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் திமராயன் போன்று அநாகரிக செயலில் போன்றோர்களால் தான் மருத்துவமனையின் தரம் குறையும் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்.
No comments:
Post a Comment