ஸ்ரீ ஸ்ரீ ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 23 November 2023

ஸ்ரீ ஸ்ரீ ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரிய கணக்கம்பட்டி அமைந்துள்ள ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா சமுத்திரத்தினர் மகா கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. 19.11.2023  கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அன்று காலை சுவாமிகளுக்கு கோ பூஜை மகா சுதர்சன ஹோமம் துவங்கியது அன்று மாலை வாஸ்து சாந்தி அங்குரா பணம் முதல் கால யாக பூஜை வேத பாராயணத்துடன் தூங்கியது. 



23 11 2023 வியாழக்கிழமை காலை திருப்பள்ளி எழுச்சியுடன் வேத பாராயணம் ஓமங்கள்  திரவியங்கள் பூர்ணாவதி நடைபெற்று மகா சம்பவர்த்தனம் கும்பங்கள் கோபுரத்திற்கு புனித நீர் கலசங்கள் எடுத்துச் சென்று  தீர்த்தங்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் மீது  புனித நீர் தெளிக்கப்பட்டது மூலவர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


விழா ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவர் சீதா லட்சுமி ராமாமிர்தம், ஊர் நாயுடு ரமேஷ், ஊர் தர்மகர்த்தா கோகுல் மற்றும்  ஊர் பொதுமக்கள் யாதவ மகாசபை தலைவர் மணிவண்ணன் இளைஞர் அணி பொறுப்பாளர்கள்  மற்றும் விழாக்குழுவினர் திருமால் நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக  கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்தினார் மேலும் குன்னத்தூர் சீனிவாச ஐயங்கார் மற்றும் பெரிய கனகாம்பட்டி எஸ் மோகன் திருப்பதி தேவஸ்தான வித்துவான் தேவராஜ் ஆகியோர் மங்கல இசை குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்

No comments:

Post a Comment

Post Top Ad