கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குன்னத்தூரில் கணவனை இழந்த கீதா 36 தனது அண்ணனுடன் வசித்து கொண்டு வீட்டின் அருகாமையில் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். குன்னத்தூர் அரசு மதுபான கடை அருகில் இருப்பதால், மது அருந்துவதற்காக இவர்கள் கடையை சுற்றி இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மது அருந்துவதும் வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு வழக்கம் போல் பத்துமணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டில் உறங்க சென்றுள்ளார் . நள்ளிரவு நேரத்தில் கீதா இயற்க்கை உபாதைக்காக வெளியில் உள்ள கழிவறைக்கு வந்ததாகவும் அப்போது மறைந்திருந்தவர்கள் தூக்கி சென்று அடித்து பாலியல் பலாத்தாகரம் செய்யட்டதாகவும் அதிகாலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவரிடம் சாமல்பட்டி போலிசார் விசாரணை நடத்தினர்.பின்னர் தடவியல் நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.பின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிடமும் சோதனை செய்தனர். உடலில் காயங்களுடன் இருந்த அப்பெண் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஐந்து பேர் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக அக்கம் பக்கத்தில் கூறியதாகவும் அதனால் அப்பகுதியில் மது அருந்துபவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் குன்னத்தூர் கிராமத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்திய நாராயணன்.
No comments:
Post a Comment