சாலையோரம் குப்பைகள் கொட்டி உள்ளதால் நோய் பரவும் அவல நிலை. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 4 November 2023

சாலையோரம் குப்பைகள் கொட்டி உள்ளதால் நோய் பரவும் அவல நிலை.


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் சாமல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சாமல்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள காந்திநகர் மற்றும் ஓம் சக்தி நகர் ஆகிய பகுதிகளில்  குப்பைகளை சாலையோரம் அப்பகுதி பொதுமக்கள் கொட்டும் குப்பைகளை முழுமையாக பஞ்சாயத்து நிர்வாகம் எரிக்கப்படாத நிலையில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.


இதனால் சாலையின் ஓரத்தில் கொட்டப்படும் குப்பையால் இந்த சாலையை பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவிகள் சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இதைப்பற்றி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் முழுமையாக ஆய்வு செய்யாமல் தங்களது சொந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது எனவே மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இப்பகுதியை நேரில் வந்து ஆய்வு செய்து  குப்பையை அகற்றவும் அல்லது எரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது உடனடியாக நிறைவேற்றுவாரா வட்டார வளர்ச்சி அலுவலர்????


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்

No comments:

Post a Comment

Post Top Ad