சாலை விபத்தில் மரணம் அடைந்த காவல்துறையினருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 4 November 2023

சாலை விபத்தில் மரணம் அடைந்த காவல்துறையினருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் பகுதியில் சேர்ந்த சத்தியமூர்த்தி இவர் தமிழ்நாடு காவல்துறையில் 7ம் படைப்பிறவில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது அந்தேரிப்பட்டி ஜங்ஷன் பகுதியில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறு கீழே விழுந்ததில் உயிருக்கு போராடிய சத்தியமூர்த்தி என்ற காவலர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டார் இறந்த நபரின் உடல் உடற்குறு ஆய்வு மேற்கொள்ள ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில் இன்று பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.


காவல்துறையில் பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்த நபருக்கு காவல்துறையின் சார்பில் அளிக்கப்படும் 21 குண்டுகள் மூலங்க அவருக்கு ஆழ்ந்த இரங்கலை காவல்துறையின் சார்பில் செலுத்தினார்கள், இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கர்நாடகா செயலாளர் கோவேந்தன் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்.


இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன், தொகுதி செயலாளர் சங்கத்தமிழ் சரவணன், தொகுதி துணை செயலாளர் தலித் பிரபாகரன், நகர செயலாளர் கோவேந்தன் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் திருமா அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ். சத்திய நாராயணன்.

No comments:

Post a Comment

Post Top Ad