கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கிருஷ்ணா பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் சூளகிரியில் நகரில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்..
இவரது மகளை சிலர் கேலி கிண்டல் செய்து நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.. இந்த நிலையில் தனது மகளுக்கு தொல்லை கொடுத்தவர்களிடம் ஓட்டல் உரிமையாளர் தட்டிகேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அந்த இளைஞர்கள் மது போதையில் இருந்தாக கூறப்பட்ட நிலையில், தான் வைத்திருந்த அரிவாளால் ஓட்டல் உரிமையாளரை தலையில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது..
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டல் உரிமையாளர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் ஏப்ரல் 8 தேதி அன்று இரவு 8 மணியளவில் சூளகிரி போலிஸ் இன்ஸ்பெக்டர் தேவி அவர்கள் சம்மந்தப்பட்ட 2 இளைஞர் பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த பின்னர் ஓசூர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவான மற்றொரு இளைஞர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்..
No comments:
Post a Comment