இந்த நிலையில் 30 கற்கும் மேற்பட்ட குடியிருப்பு பெண்கள் காலி குடங்களுடன் ஏப்ரல் 3 தேதி அன்று காலை 11 மணியளவில் சூளகிரியில் உள்ள பிடிஒ அலுவலக முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் அதிகாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வறட்சி காரணமாக நிலத்தில் நீர்மட்டம் குறைந்த நிலையில், அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு வருகிறது, வாணியர் தெரு மற்றும் கோட்டை தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் அவசர கால நடவடிக்கை தற்போது டேங்கர் லாரியின் மூலம் தண்ணீர் வழங்கப்படும் விரைவில் தங்கள் குடியிருப்பு பகுதியில் குடிநீர் கிடைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பின்னர்... குடியிருப்பு பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment