வேப்பனப்பள்ளி அருகே தனியார் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து; சுமார் 25 லட்சம் மதிப்பிலான ஆடைகள் தீயில் கருகி நாசம்! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 26 July 2024

வேப்பனப்பள்ளி அருகே தனியார் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து; சுமார் 25 லட்சம் மதிப்பிலான ஆடைகள் தீயில் கருகி நாசம்!


கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை சேர்ந்தவர் சுல்தான் ஷெரிப். இவர் வேப்பனப்பள்ளி நகரில்  ஆதம் டெக்ஸ்டைல் என்ற ஜவுளிக்கடையை பல வருடமாக நடத்தி வருகிறார். சுல்தான் ஷெரிப் வழக்கம் போல் நேற்று இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் இன்று காலை திடீரென கடையில் இருந்து புகை மூட்டம் வந்ததை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து சுல்தான் ஷெரிப்புக்கு தகவல் அளித்தனர். உடனடியாக கடைக்கு வந்த சுல்தான் ஷெரிப் கடையை திறந்து பார்த்த போது கடைக்குள் உள்ள துணிகளில்  தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இதனை அடுத்து சுல்தான் உடனடியாக காவல் துறைக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தார். தகவல் அறிந்து  தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீ மளமளவென கட்டிடத்தின்இரண்டாவது தளத்திற்கும் தீ  பரவியது. இதனை அடுத்து கிருஷ்ணகிரி, பர்கூர் பகுதியில் இருந்து வந்த 3 தீயணைப்பு வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்க போராடினர். கட்டிடம் முழுவதும் தீ பரவியதால் உள்ளே செல்ல முடியமால் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டத்தின் சுவரை உடைத்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரார்கள்  சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். 


இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் 25 லட்சம் மதிப்பிலான புத்தாடைகள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது. இந்த விபத்து சம்மந்தமாக வேப்பனப்பள்ளி போலீசார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad