மருமகனை ஆள் வைத்து தீர்த்துக்கட்டிய மாமியார், மாமனார் உள்ளிட்ட 8பேர் கைது தட்டி தூக்கிய தமிழக போலீசார். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 July 2024

மருமகனை ஆள் வைத்து தீர்த்துக்கட்டிய மாமியார், மாமனார் உள்ளிட்ட 8பேர் கைது தட்டி தூக்கிய தமிழக போலீசார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பத்தளப்பள்ளி என்னுமிடத்தில் விடுதியை லீசுக்கு எடுத்த 4 நாட்களில் விடுதியின் மேல் தளத்தில் ஆந்திராவை சேர்ந்த ஆசனைய்யா(28) என்கிற இளைஞர் கடந்த 5ம் தேதி கழுத்து வயிறு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்தார்.

அட்கோ போலிசார் உடலை கைப்பற்றி, கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க துப்பு கிடைக்காமல் தினறி வந்தநிலையில் ஆசனைய்யாவின் மாமியார்,மாமனார் மற்றும் கூலிப்படையை ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தட்டித்தூக்கி உள்ளது தமிழக தனிப்படை போலிஸ் நடந்தது என்ன? உயிரிழந்த ஆசனைய்யா, கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு பிரம்பீ (22) என்கிற காதலி வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு ஆறு மாத கைக்குழந்தை பரஹானா என்கிற பெண்குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது.


ஆசனைய்யாவின் மாமியார் வீட்டார் வசதியானவர்கள் என்கிற நிலையில், ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த ஆசனைய்யா, மனைவியை ஆந்திராவில் உள்ள தனது வீட்டில் விட்டுவிட்டு தொழில் தொடங்க ஒசூர் வந்தபோதும் டிப்டாப்பாக உடை அணிந்து சுற்றி வந்ததாலும் தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க எண்ணிய ஆசனைய்யாவின் மாமியார், மாமனார் இருவரும் தனது மருமகனை தீர்த்துக்கட்ட தனது தங்கை மாதேவி என்கிற வீரம்மா(35) விடம் கூற அவரது கள்ளக்காதலனான கூலிப்படையை சேர்ந்த ஆந்திரா நந்தியால் மாவட்டம் சீனிவாசுலு(38) என்பவரிடம் கூறி கொலையை திட்டமிட்டு சீனிவாசுலு தனது கூட்டத்துடன் வந்து பத்தளப்பள்ளியில் வீடு வாடகைக்கு எடுத்து ஆசனைய்யாவை கொலை செய்து காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்டு ஆந்திரா சென்று தலைமறைவாக சுற்றி வந்துள்ளனர்.


இந்த வழக்கில் ஆசனைய்யாவின் மாமியார், மாமனார் சின்ன மாமியார் கூலிப்படையினர் என 8பேரை கைது செய்து தமிழகம் அழைத்து வந்து சிறைப்படுத்தி உள்ளனர்.. தனது கணவனை அம்மா தான் கொலை செய்தார்கள் என தெரியாமல் அம்மாவிடம் சோகத்தை கொட்டி ஆறுதல் அடைந்து வந்த பீராம்பி கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad