சூளகிரி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் மாணவி பலி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 8 August 2024

சூளகிரி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் மாணவி பலி


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் 18 வயதான இவர் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் மரியா சில்வியா 19 என்ற மாணவி பெங்களூருவில் தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வரும் நிலையில்,  இருவரும் இன்று மாலை கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது சூளகிரி அருகே ஒட்டேனூர் என்ற கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் நிலை தடுமாறி சாலை விழுந்தனர்.  இதில் பலத்த காயமடந்த இருவரும்  சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி  ரத்த வெள்ளத்தில்  பரிதாபமாக உயிரிழந்தனர். 


பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும் இந்த விபத்து குறித்து அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கல்லூரி மாணவ மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad